பல்கலைக்கழக மாணவரொருவர் திடீரென உயிரிழப்பு!!

1019

மொரட்டுவை பல்கலைக்கழக மாணவரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. குறித்த சம்பவம் இன்று (05.04.2024) அதிகாலை பதிவாகியுள்ளது. திடீர் சுகவீனம் காரணமாக அவர், இன்று அதிகாலை பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

உயிரிழந்தவர் ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த வினோஜ்குமார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதுடன், பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.