திருமணம் செய்து விட்டு தலைமறைவான காதலன்.. விரக்தியில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

338

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மேலசிந்தலைசேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிடர் சுரேஷ். இவரது மகள் ஹேமலதா (19). இவருக்கும் சிலமலைக் கிராமத்தைச் சேர்ந்த சந்துருவுக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி சின்னமனூர் சிவகாமி அம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது.

சந்துருவின் தாத்தா சேதுராமன் வீட்டில் சில நாட்கள் தங்கினார்கள். ஒரு கட்டத்தில் கோம்பை காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். இதையடுத்து, இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில், ஹேமலதாவும், சந்துருவும் மைனர் என்பதால், அறிவுரை கூறி, பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், சந்துருவின் பெற்றோர், சந்துருவை பெங்களூரு அழைத்து சென்று தலைமறைவாக வைத்து இருப்பதாக, ஹேமலதா போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் சந்துருவை தேடி வந்தனர். இந்நிலையில், கணவரை காணவில்லை என்ற மன உளைச்சலில் ஹேமலதா நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் ஹேமலதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இறந்த ஹேமலதாவின் தாயார் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து, காதலித்து மகளுடன் குடும்பம் நடத்திய சந்துருவையும் அவரது குடும்பத்தினரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தினர். பின்னர், அங்கிருந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.