தாய் வீட்டிற்கு சென்று திரும்பிய மனைவி.. ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்ற கணவன்!!

338

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் கோட்டை தெருவை சேர்ந்தவர் பூ வியாபாரி மகேந்திரன். இவர் தனது அத்தை மகளான பாரதியை 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

தம்பதிக்கு குழந்தை இல்லாத நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான மகேந்திரன், அடிக்கடி குடித்துவிட்டு, மனைவி பாரதியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மகேந்திரன் சமீபத்தில் கர்நாடக மாநிலம் சர்ஜாபுரத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டார். வீடு திரும்பிய மகேந்திரன் தொடர்ந்து போதை பழக்கத்தில் மூழ்கியுள்ளார்.

இந்நிலையில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட சண்டையில், 15 நாட்களுக்கு பிறகு திப்பாலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்ற பாரதி, நேற்று கணவர் வீட்டிற்கு வந்தபோது, மகேந்திரன் தனது மனைவி பாரதியை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றார்.

இன்று காலை மகேந்திரனின் தாய் வீட்டை சுற்றி பார்த்தபோது மருமகள் பாரதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாகலூர் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பாரதியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த மகேந்திரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.