வலையில் சிக்கிய 11 டொல்பின்கள் : கடற்றொழிலாளர் செய்த நெகிழ்ச்சியான செயல்!!

197

யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் கரைவலையில் அகப்பட்ட 11 டொல்பின்களும் உயிருடன் திருப்பி விடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (05.04.2024) இடம்பெற்றுள்ளது.

யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியை சேர்ந்த அருமைத்துரை சம்மாட்டியின் கரைவலையில் நேற்று முன் தினம்(04) காலை குறித்த 11 டொல்பின்களும் அகப்பட்டுள்ளன.

இதன்போது டொல்பின்கள் வலைக்குள் அகப்பட்டதை அறிந்த கடற்றொழிலாளர்கள் பத்திரமாக 11 டொல்பின்களையும் உயிருடன் மீட்டு திரும்பவும் கடலுக்குள் பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் டொல்பின்களை உயிருடன் கடலுக்குள் அனுப்பி வைத்த கடற்றொழிலாளர்களுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.