வவுனியா வேப்பங்குளம் காளி கோவில் வருடாந்த உற்சவம் நேற்று (08.07) மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலை 10 மணியளவில் பறவைக்காவடிகள், செடில் காவடிகள், பாற்செம்பு, தீச்சட்டி என்பன ஆதி விநாயகர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி காளி கோவிலை வந்தடைந்தது.
தொடர்ந்து சிறப்பு பூசைகளும் நடைபெற்றதுடன் இன் நிகழ்வுகளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
-பிரசாத்-