வெப்பநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!

1441

இன்று (08.04.2024) மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு, மேல், சப்ரகமுவ, வடமேல், தென் மாகாணங்களுடன் மொனராகலை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பநிலை இவ்வாறு அதிகரித்து காணப்படக்கூடும் என அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.