திருவிழாவில் சோகம்…150 அடி உயர தேர் சரிந்து கோர விபத்து!!

1035

பெங்களூருவில், கோயில் திருவிழாவில் 150 அடி உயரத்தில் இருந்த தேரை, பக்தர்கள் வடம்பிடித்து இழுக்கும் போது, திடீரென எதிர்பாராத விதத்தில் தேர் சரிந்து கீழே விழும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஹுஸ்கூர் கிராமத்தில் இன்று தேர் திருவிழா நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் கோயில் திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று தேர் திருவிழா நடைபெற்றது.

சுமார் 150 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக தேர் சரிந்து கீழே விழுந்தது. தேர் கீழே விழுவதை உணர்ந்த பக்தர்கள் அங்கிருந்து ஓடியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் பல பக்தர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி மெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

150 அடி உயரத்தில் தேர் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு அருகே ஹூஸ்கூர் கிராமத்தில் உள்ள மதுரம்மா தேவி கோயில் தேர் திருவிழாவில் 150 அடி உயர தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சுமார் 150 அடி உயரம் கொண்ட இந்த தேரை பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக தேர் சாய்ந்து சரிந்து கீழே விழுந்தது.

தேர் சாய்ந்து விழுவதை பார்த்த பக்தர்கள் நொடிப்பொழுதில் சுதாரித்துக்கொண்டு உடனடியாக அங்கிருந்து ஓடிவிட்டனர். இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் இதில் ஏராளமான பக்தர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிகிறது. இது குறித்த புகைப்படங்கள் , வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், 150 அடி தேர் சாய்ந்து விழுந்த இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.