கொழும்பில் வீதியில் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

847

கொழும்பு கோட்டையில் கட்டடமொன்றில் கதவுடன் கூடிய ஜன்னல் ஒன்று உடைந்து வீழ்ந்தத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

செத்தம் வீதியில் அமைந்துள்ள பழைய கட்டிடமொன்றில் கதவுடன் கூடிய ஜன்னல் ஒன்று வீதியில் நடந்து சென்றவரின் தலையில் விழுந்ததில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார். குறித்த நபர் நேற்று பிற்பகல் இந்த சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

காயமடைந்த நபரின் அடையாளம் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்