5 கோடி பெறுமதியான நகைகளுடன் இரு கொள்ளையர்கள் கைது!!

287

Gold

மொரட்டுமுல்ல பிரதேசத்தில் அடகு பிடிக்கும் நிலையம் ஒன்றிலிருந்த 11 கிலோ கிராம் நகைகளை கொள்ளையிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிரிஹான விசேட குற்றப் பிரிவினரால் மேற்கொண்ட விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களினால் திக்வெல்ல மற்றும் வெலிகம பிரதேசங்களில் அடகு வைக்கப்பட்டிருந்த 5 கோடி பெறுமதியான 9 கிலோ கிராம் தங்க நகைகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதுவரை கைப்பற்றப்பட்ட அதிக பெறுமதியான தங்க நகைகள் இது என பொலிஸார் தெரிவித்தனர். 27 மற்றும் 43 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.