15ஆம் திகதி அரச பொது விடுமுறை : வெளியானது அறிவிப்பு!!

484

எதிர்வரும் 15ஆம் திகதி அரச பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளார்.

தமிழ் சிங்களப் புத்தாண்டு விடுமுறை தினங்களில் வருவதன் காரணமாக 15ஆம் திகதி பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று முன்னதாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், கடந்த திங்கட் கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, எதிர்வரும் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக அறிவித்து அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.