முல்லைத்தீவில் திருமணம் செய்து நான்கு மாதங்களில் உயிரிழந்த யாழ் நபர்!!

962

முல்லைத்தீவில் திருமணம் செய்து நான்கு மாதங்களில் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .

யாழ்ப்பாணம் அல்வாய் வடமேற்கு திக்கம் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் முல்லைத்தீவு தேராவில் பகுதியில் வசித்து வந்த நிலையில் , நான்கு மாதங்களுக்கு முன்னர் பதிவுத்திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கடும் சுகயீனமுற்று முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பரமகுரு ஜெகன் (வயது 44) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்த நிலையில், குடும்பஸ்தரின் திடீர் உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.