இலங்கையில் வெளிநாட்டவரை அவமானப்படுத்தி விரட்டிய வியாபாரி : மனம் நொந்து வெளியிட்ட காணொளி!!

560

புதுக்கடை பகுதியில் உள்ள Street Foods கடை ஒன்றில் கொத்து ரொட்டியை 1900 ரூபாய்க்கு விற்க போய் , அது விலை அதிகம் என மறுத்த வெளிநாட்டவர் ஒருவரை கடைக்காரர் அவமானப்படுத்தி விரட்டிய சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இன்னிலையில் ப்[ஆதிக்கப்பட்ட வெளிநாட்டவர் மனமுடைந்து தனக்க்கு நேர்ந்த சம்பவத்தை காணொளியாக வெளியிட்டுள்ளார்.

Emeka Iwueze என்ற அமெரிக்கர், வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்கடை பகுதியில் உள்ள Street Foods கடைக்கு விஜயம் செய்த போது, இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

அநாகரீகமாக துரத்திய கடைக்காரர்

சம்பந்தப்பட்ட கடைக்காரர், மோசமாக திட்டி விரட்டும் வெளிநாட்டவரை , அந்த இடத்தை விட்டு துரத்தும் காட்சியை அநேகர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட நிலையில் , Street Food கடைக்காரர் Get Out என அநாகரீகமாக துரத்தும் சாட்சிகளை பார்த்த போது , அது அநேக இலங்கையரை வெட்கப்படவைத்தது .

நாட்டினை சுற்றுலாத்துறையின் மூலம் மீள திட்டமிடும் ஒரு நாட்டில், வியாபாரியின் இந்த செயல் இலங்கை சுற்றுலா துறையின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.

கடைக்காரர் அநாகரிகாமாக நடத்துகொண்டது மட்டுமல்லாது வெளிநாட்டவரை திட்டி விரட்டியதால் திகைத்து போன அவர் தனது மோசமான அனுபவத்தை கூறியுள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் கொழும்பு 12 இல் வசிக்கும் 51 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட நபர் இன்று (17) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்நிலையில் குறித்த கடைக்காரரின் செயல் ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் விசனம் கொள்ள வைத்துள்ளது.