வீடொன்றுக்குள் 2 பெண்களின் சடலங்கள் மீட்பு!!

427

களுத்துறை, இசுரு உயன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு இரண்டு வயோதிப பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இருவரது சடலங்களும் சிதைந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இருவரும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

களுத்துறை குற்றப் புலனாய்வு ஆய்வக அதிகாரிகள் நீதவான் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.