10 நாட்களில் திருமணம்… இளம் பெண்ணுக்கு எமனான உளவு இயந்திரம்!!

945

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி  சே.பேட்டை கிராமத்தில் வசித்து வருபவர்  21 வயது காயத்ரி.  இன்னும் 10 நாட்களில் காயத்ரிக்கு திருமணம். இதனையடுத்து  தனது வருங்கால  கணவருடன் இருசக்கர வாகனத்தில் பக்கத்து ஊருக்கு சென்றிருந்தார். வீடு திரும்பும் போது   எதிரே வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் காயத்ரி டிராக்டர் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். வருங்கால கணவர் கண்முன்னே இக்கோர சம்பவம் அரங்கேறியது.

ஆங்காங்கே சிறிய காயங்களுடன் வருங்காலக் கணவர் தப்பித்து விட்டார்.  இச்சம்பவம்  குறித்து தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறை  காயத்ரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.

இந்த விபத்து குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் ஓட்டுநரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். 10 நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.