வெளிநாடொன்றில் மர்மாக உயிரிழந்த இலங்கை இளைஞன்!!

217

 

கட்டாரில் தொழிலுக்கு சென்ற இலங்கை இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

பொல்பித்திகம பிரதேசத்தில் இருந்து புதிய வீடு கட்டும் கனவை நிறைவேற்ற கட்டார் சென்ற இளைஞன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

27 வயதான ஜனக சதுரங்க செனவிரத்ன என்ற இளைஞன் இலத்திரனியல் வேலைக்காக கட்டார் சென்றுள்ளார். கடந்த 12ஆம் திகதி தனது காதலியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென எவ்வித சத்தமும் கேட்டாமல் போனதாக காதலி கூறினார்.

சார்ஜரில் கையடக்க தொலைபேசியை பொருத்திய நிலையில் தொலைபேசியில் பேசியதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக நண்பர் ஒருவர் 13ஆம் திகதி அறிவித்துள்ளார்.

மின்சாரம் தாக்கியிருந்தால் கையடக்க தொலைபேசி எரிந்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞனின் மரணம் தூதரகம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது, ஆனால் இறப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. உடலை விரைவில் நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.