வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் தேர்த் திருவிழா!

869

வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ  சிந்தாமணி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று 22.04.2024 (திங்கட்கிழமை ) வெகு சிறப்பாக நடைபெற்றது.காலை ஐந்து முப்பது மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி ஏழு முப்பது மணியளவில் கொடிதம்ப பூசை இடம்பெற்று காலை எட்டு முப்பது மணியளவில் வசந்தமண்டப பூஜையும் தொடர்ந்து ஒன்பதரை மணியளவில்  எம்பெருமான் விநாயகப் பெருமானும் சண்டேஸ்வரரும் திருத்தேரில் ஆரோகணித்தனர்.

தொடர்ந்து பத்து  மணியளவில் இரதோற்சவம் இடம்பெற்று காலை பதினொரு மணியளவில்  ரதம் இருப்பிடத்தை வந்தடைய அர்ச்சனைகள் இடம்பெற்றன.இன்றைய தேர்த்திருவிழாவின் போது அடியார்கள் அங்கபிரதட்சணம் அடியடித்தல் மற்றும் கற்பூர சட்டி ஏந்தி தமது நேர்த்தி கடன்களை நிறைவு செய்தனர்.
இத் தேர்த் திருவிழாவில் நூற்றுகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் .பின்னர் மதியம் பன்னிரண்டு  மணியளவில் பச்சை சாத்தும் உற்சவம் இடம்பெற்றது.