எரிமலைக்கு அருகில் புகைப்படம் எடுக்க ஆசைப்பட இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

321

எரிமலைக்கு அருகில் சென்று புகைப்படம் எடுக்க முயன்ற சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் பள்ளத்தாக்கிற்குள் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று இந்தோனேஷியாவில் பதிவாகியுள்ளது.

இந்தோனேஷியாவின் – இஜென் எரிமலையை பார்க்கச் சென்ற சீனா பெண் ஒருவரே இவ்வாறு எரிமலை பள்ளத்தாக்கிற்குள் வீழ்ந்துள்ளார்.

சீனாவைச் சேர்ந்த 31 வயதான குறித்த பெண் இஜென் எரிமலை நீல நிறத்தில் காட்சியளித்ததை பார்த்து எரிமலைக்கு மிக அருகில் நின்று புகைப்படம் எடுக்க முயற்சித்துள்ளார்.

இதன்போது, அந்த பகுதியில் பலமான காற்று வீசியதில் பள்ளத்தாக்கிற்குள் தூக்கி வீசப்பட்ட குறித்த பெண் சுமார் 246 அடி பள்ளத்திற்குள் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

2 மணித்தியால தேடுதலுக்குப் பின்னர் அவரின் உடல் மீட்கப்பட்டு, சீனாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.