10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல்.. பெருகும் ஆதரவு!!

838

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்யும் நெட்டிசன்களுக்கு எதிரான கருத்துக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், சீதாபூரைச் சேர்ந்த மாணவி பிராச்சி நிகம் (Prachi Nigam). இவர், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 98.5 சதவிகித மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

அதாவது இவர் 600 மதிப்பெண்களுக்கு 591 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். தற்போது, இவரின் தோற்றத்தை வைத்து நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

இவரின் முகத்தில் முடி வளர்ந்திருப்பதை குறிப்பிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். மீசை வளர்ந்திருக்கிறது என்றும், அழகில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கிண்டலடித்து வருகின்றனர்.

ஆனால், நெட்டிசன்கள் பதிவிடும் கருத்துக்களை கண்டித்து பலரும் மாணவிக்கு ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இன்னும் சிலர் பெண்களை பாதிக்கும் Polycystic Ovarian Syndrome காரணமாக அவர் முகத்தில் முடி வளர்ந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாணவி பேசுகையில், “நான் முதலிடம் பிடிப்பேன் என்று நினைக்கவில்லை. படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினேன். இன்ஜினீயராக விரும்புகிறேன். IIT-JEE நுழைவுத் தேர்வில் வெற்றி பெற ஆசை” என்று பேசியுள்ளார்.