காணாமல்போன பெண் மொடல் ஓராண்டுக்கு பின் வெளிநாட்டு சவக்கிடங்கில் மீட்பு!!

269

பஹ்ரைனில் காணாமல் போன தாய்லாந்து பெண் மொடல், ஓர் ஆண்டுக்கு பின்னர் சவக்கிடங்கில் மீட்கப்பட்டது. தாய்லாந்தைச் சேர்ந்த Kaikan Kaennakam (31) என்ற பெண் மொடல், பஹ்ரைன் நாட்டுக்கு இடம்பெயர்ந்தார்.

எனினும் சமூக வலைத்தளம் வாயிலாக தனது குடும்பத்தினருடன் பேசி வந்துள்ளார். அப்போது அவர் பஹ்ரைனில் காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து வருவதாக குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.

ஆனால், 2023 ஏப்ரல் மாதம் Kaikan தனது சமூக ஊடக கணக்குகளில் இடுகையிடுவதை நிறுத்தினார். இதனால் கவலையடைந்த Kaikan-னின் குடும்பத்தினர், அவரை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயன்றும் அணுக முடியவில்லை.

அதனைத் தொடர்ந்து சனவரி மாதம் பஹ்ரைனில் உள்ள தாய்லாந்து தூதரகத்தின் உதவியை மொடலின் குடும்பத்தினர் நாடியுள்ளனர்.

இதனையடுத்து, கடந்த 18ஆம் திகதி பஹ்ரைனில் உள்ள தாய்லாந்து தூதரகம், அடையாளம் தெரியாத தென்கிழக்கு ஆசிய பெண்ணின் உடல், கடந்த ஆண்டு முதல் மனமாவில் உள்ள Salmaniya மருத்துவ வளாக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக Kaikan குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளது.

ஆல்கஹால் நஞ்சு காரணமாக கடுமையான நுரையீரல் மற்றும் இதய செயலிழப்பு ஏற்பட்டு Kaikan உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரது குடும்பத்தினர், Kaikan-யில் உடலில் காயங்கள் இருப்பதை குறிப்பிட்டு அவரின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.