கிணற்றிலிருந்து அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட குழந்தை… தாய் அதிரடியாக கைது!!

1600

புத்தளத்தில் உள்ள வீடொன்றுக்கு அருகில் கிணற்றிலிருந்து இரண்டரை மாத குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் புத்தளம் – கற்பிட்டி, கந்தகுடாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த குழந்தையின் சடலம் இன்று (02-04-2024) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். கிணற்றிலிருந்து மொஹமட் பாத்திமா என்ற இரண்டரை மாத குழந்தையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த குழந்தையின் தாய் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.