வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்று 30கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சாவை கைப்பற்றிய வவுனியா பொலிஸார் – இருவர் கைது

1456

30கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சாவை கைப்பற்றிய வவுனியா பொலிஸார்…

வவுனியா பொலிஸாரினால் இன்று (06.05.2024) அதிகாலை யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் விசேட நடவடிக்கையின் போது 30கிலோ 500கிராம் கேரளா கஞ்சாவினை மீட்டெடுத்துள்ளமையுடன் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் போதைப்பொருள் கைமாறுவதாக இடம்பெறுவதாக வவுனியா விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ரிஸ்வி தலமையிலான பொலிஸ் பிரிவினர் திடீர் சோதனை நடவடிக்கையினை மருதங்கேனி பகுதியில் முன்னெடுத்திருந்தனர்

இதன்போது போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில்
யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தை சேர்ந்த 36,35 ஆகிய வயதுடைய இரு நபர்களை கைது செய்துள்ளமையுடன் அவர்களிடமிருந்து 30 kg 500g கேரளா கஞ்சாவினை வவுனியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ் பிரிவினர் மீட்டெடுத்துள்ளனர்

கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா ஆகியவை மருதங்கேனி பொலிஸ்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமையுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ் பிரிவினருடன் இணைந்து மருதங்கேனி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

அண்மைக்காலமாக வவுனியா விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் வவுனியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ் பிரிவினருடன் இணைந்து பல திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்