வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்புக்காக சென்ற தமிழ் இளைஞன் பரிதாபமாக பலி!!

475

வெளிநாட்டில் வேலைவாய்ப்புக்காக சென்ற தமிழ் இளைஞன் விபத்து காரணமாக உயிரிழந்துள்ளார். மலேஷியாவிற்கு பணிக்கு சென்ற மஸ்கெலியா பகுதியில் உள்ள இளைஞர் அங்கு பொயிலர் வெடித்து உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஸ்கெலியா புரவுன்ஷீக் தோட்ட மோட்டிங்ஹேம் பிரிவைச் சேர்ந்த 24 வயதான துரைராஜ் ராஜ்குமார் டேவிட்சன் என்பவரே உயிரிழந்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கையில் இருந்து மலேஷியா சென்றுள்ளார்.

தண்ணீர் போத்தல் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய நிலையில் உயிரிந்துள்ளார். அவரது சடலம் இலங்கைக்கு கொண்டு வருவதற்காக ஏற்பாடுகளை அவரது உறவினர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.