உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு!!

2607

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது நிறைவடைந்துள்ள சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் நான்கு மாதங்களின் பின்னர் வெளியிடப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.