முதல் முயற்சியிலேயே உலக சாதனையை முறியடித்த இலங்கை வீரர்!!

271

உலக பரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் F44 ஈட்டி எறிதலில் இலங்கை வீரர் சமிதா துலான் உலக சாதனையை முறியடித்துள்ளார். ஜப்பான் – டோக்கியோவில் நடைபெற்ற போட்டியில் தனது முதல் முயற்சியிலேயே அவர் 66.49 மீட்டர் தூரம் எறிந்து குறித்த சாதனை படைத்துள்ளார்.

பாரா தடகளப் போட்டிகளில் F44 பிரிவின் தடகள வீரர்களும் F64 பிரிவில் போட்டியிடுகின்றனர். இதனையடுத்து, குறித்த போட்டியில் F64 பிரிவின் கீழ் போட்டியிட்ட இந்திய வீராங்கனை சுமித் தங்கப் பதக்கத்தை வென்றார்.

மேலும் இதில் இரண்டாம் இடம் பெற்ற சமிதா துலான் 66.49 மீற்றர் தூரத்தை பதிவு செய்தார். குறிப்பாக மூன்றாவது வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்திய வீரர் சந்தீப் 60.41 தூரத்தை பதிவு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.