கார் மீது விழுந்த பாரிய மரம் : தெய்வாதீனமாக தப்பிய குடும்பம்!!

267

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (24.05) பிற்பகல் மஹவெவ, கொஸ்வாடிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகவும்,

காரில் இருந்த மூவர் மாரவில ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் அனர்த்த நிவாரண அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் கொஸ்வாடிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மரம் கார் மீது விழுந்துள்ளது.

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் ஏழு வயது மகள் ஆகியோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை கடந்த நாட்களில் மோட்டார் சைக்கிளில் சென்ற மூன்று பெண்கள் மரம் விழுந்து உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.