யாழ். கொடிகாமத்தைச் சேர்ந்த 19 வயது யுவதியைக் காணவில்லையனெ அவரின் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கொடிகாமம் மந்துவில் கிழக்குப் பகுதியினைச் சேர்ந்த புஸ்பராசா றெசிக்கா என்ற யுவதியே கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போயுள்ளார்.
தனியார் கல்வி நிறுவனத்திற்குச் சென்ற குறித்த யுவதி, இதுவரை வீடு திரும்பவில்லையென தாயார் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்