யாழ்ப்பாண பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் (13.06.2024) காலை 100 மணியளவில் நெல்லியடி கிழக்கு முடக்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் மூத்த மகனுக்கு 9 வயது அடுத்த வருடம் புலமைப் பரீட்சைக்கு தோற்றவுள்ளார். இரண்டாவது மகளுக்கு 7 வயது 2 ஆம் தரத்தில் கல்வி கற்று வருகின்றார்.
சம்பவத்தில் 35 வயதான குணசீலன் ஆனந்தி என்ற இளம் தாயை இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.