இலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரிப்பு : கடந்த 4 வருடத்திற்குள் 210,000 முறைப்பாடுகள்!!

292

Abuse

இலங்கையில் சிறுவர்கள் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக கடந்த 4 வருட காலத்திற்குள் 2 இலட்சத்து 10 ஆயிரம் முறைப்பாடுகள் தமது ஒன் லைன் ஊடாக கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி அனோமா திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில், 25 ஆயிரம் முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனையும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

2013 ஆம் ஆண்டில் 691 சிறுவர்களை பலவந்தமாக கொண்டுசென்று, பாலியலுக்கு உள்ளாக்கப்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. மேலும் 681 முறைப்பாடுகள் சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த ஆண்டு 2014ல் ஜனவரி- ஜூன் மாதம் வரையில் 228 சிறுவர்கள் பலவந்தமாக பாலியலுக்கு உள்ளாக்கப்பட்ட துஸ்பிரயோக சம்பவங்களும், 259 சிறுவர்கள் துஸ்பிரயோக சம்பவங்களும் எமது அதிகார சபைக்கு முறைப்பாடுகள் கிடைத்தவண்னம் உள்ளன.

கடந்த 4 வருட காலத்தில் 12 ஆயிரம் முறைப்பாடுகள் சிறுவர் பொலிஸ் பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றோம்.

எங்களுக்கு ஒன் லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ எழுத்து முலம் கிடைக்கும் தகவல்களைக் கொண்டும் 48 மணித்தியாலத்துக்குள் பொலிசார் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இதனை விட சமூக ஊடகங்கள் மூலம் சிறுவர்களை பாலியஸ் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கும் 300 பேர் அடையாளம் கண்டுள்ளோம். அதில் 30 பேருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொணடு வருகின்றோம்.

7 பேரை பொலிசாரின் உதவியுடன் கைது செய்துள்ளோம். மேலும் 30 பேர் பற்றி விசாரணைகளை மேற்கொண்டு அவர்களையும் கைது செய்ய உள்ளோம்.

சிறுவர்களுக்கு பாலியல் தூண்டும் படங்கள், காட்சிகள், சம்பவங்களை பேஸ்புக், இன்டர்நெற், வெப்தளம், டுவிட்டர் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களை “சைபர் வோச் அட்டாச்” ஊடாகவே கண்டு பிடிக்கின்றோம்.

இத்திட்டத்திற்கு சர்வதேச தொழிற்சங்க நிறுவனம் எமது அதிகார சபைக்கு நிதி வழங்குகியுள்ளது. இதனை கண்காணிக்க ஒரு பிரிவு உள்ளது என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி அனோமா திசாநாயக்க தெரிவித்தார்.