பிரித்தானியப் பிரஜை கொலையுடன் தொடர்புடைய தங்காலை பிரதேச சபைத் தலைவர் உட்பட நால்வருக்கு 20 வருடங்கள் சிறை!!

338

Thangalai

தங்காலை பகுதியில் பிரித்தானியப் பிரஜை ஒருவரை கொலைசெய்தமை மற்றும் அவரது பெண் தோழியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான வழக்கின் சந்தேகநபர்கள் நால்வருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தங்காலை முன்னாள் பிரதேசசபைத் தலைவர் சம்பத் சந்திரபுஸ்ப உள்ளிட்ட அறுவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு கடந்த இரண்டரை வருடங்களாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதில் தங்காலை முன்னாள் பிரதேசபைத் தலைவர் உள்ளிட்ட நால்வருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு ஏனைய இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.