நாகப்பாம்பிடம் இருந்து உரிமையாளரைக் காப்பாற்றிய நாய்!!

497

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் வளர்ப்பு நாய் ஒன்று, நாகப்பாம்பு கடியில் இருந்து தனது எஜமானர் ஸ்ரீகுமாரைக் காப்பாற்றி உள்ளது.

கிட்டு என்று பெயரிடப்பட்டுள்ள அந்த நாய், ஸ்ரீகுமாரின் வழிகாட்டியாகவே துணையாக இருந்து வந்த நிஅலியில், அதன் கூண்டுக்கு அருகில் இருந்த நாகப்பாம்பை கடித்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில், கிட்டத்தட்ட பார்வையற்ற ஸ்ரீகுமார், கிட்டுவின் கட்டை அவிழ்க்கச் சென்ற போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.



அவர் தனது இடது பக்கத்திலிருந்து சலசலக்கும் சத்தத்தைக் கேட்டு, ஏதோ எலி ஒன்று சத்தம் போடுகிறது என்று அந்த சத்தத்தை நிராகரித்தார், ஆனால் சலசலப்பு தொடர்ந்ததால், விழிப்புடன் இருந்த கிட்டு ஏற்கனவே அதன் கோரைப் பற்கள் வெளியே இருந்த நாகப்பாம்பை நோக்கி குதித்து, பாம்பை கடித்து உயிரிழந்தது. சீரகடவு ஊராட்சியில் பம்ப் ஆபரேட்டராக ஸ்ரீகுமார் பணியாற்றி வருகிறார்.

ஸ்ரீகுமாரின் நிலையான தோழராக துணையிருந்து வந்த அந்த நாய் அவருக்கு, அவரது மகள் பரிசாக அளித்தது. நரம்பு பாதிப்பு காரணமாக ஸ்ரீகுமாருக்கு கண்பார்வை ஏற்பட்டது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்ரீகுமார் பொருட்களை தெளிவாகப் பார்ப்பதில் சிரமத்தை அனுபவிக்கத் தொடங்கினார்.

அறுவை சிகிச்சை என தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த நிலையிலும் அவரது வலது கண் பார்வை முழுவதுமாக முடங்கியது. அவர் கிட்டுவை மட்டுமே நம்பியிருந்து சில வேலைகளைச் செய்து வந்தார். தற்போது அவரது இடது கண்ணின் பார்வையும் குறைந்து வருகிறது.