கேரள மாநிலம் கொச்சியில் பெரும்பாவூர் பகுதியில் 29 வயது இளம்பெண் ஒருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவர் ஓடக்கலி புளியம்பிள்ளை முகல் நெடும்புராத் இல்லத்தைச் சேர்ந்த விஷ்ணு என்பவரின் மனைவி சாந்தினி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் கடன் வாங்கிய சாந்தினி, கடனின் தவணையை கட்டுவதில் சிரமங்களை மேற்கொண்ட நிலையில், கடன் தொல்லைக் காரணமாக நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நேற்று மாலை கடன் தொகையைக் கேட்டு அவரது வீட்டிற்கு நிதி நிறுவன ஊழியர்கள் சிலர் வந்ததாக சாந்தினியின் உறவினர்கள் தெரிவித்தனர். குருப்பம்பட்டி போலீசார் சாந்தினியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரும்பாவூர் தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.