பச்சிளம் குழந்தையை சுற்றி நின்ற ராஜ நாகங்கள் : நெஞ்சை பதறவைக்கும் ஓர் வீடியோ!!

394

Snake

இந்திய- மத்திய பிரதேசத்தில், ஒரு வீட்டின் முன் கட்டிலில் படுத்திருந்த 6 மாத குழந்தையை 4 ராஜ நாகங்கள் திடீரென்று சூழ்ந்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் பெற்றோர்கள் வீட்டின் உள்ளே வேலை செய்து கொண்டிருந்துள்ளனர்.

பின்னர் அவர்கள் வெளியே வந்து பார்த்த போது, குழந்தையை சுற்றி நான்கு ராஜ நாகங்கள் படம் எடுத்து நின்று கொண்டிருந்துள்ளன. தூக்கத்தில் குழந்தை ராஜநாகங்கள் மேல் புரண்டு படுத்த போதும் ராஜநாகங்கள் குழந்தையை ஒன்றும் செய்யாமல் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிர்ச்சி காட்சியை பார்த்த பெற்றோர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து அந்த நான்கு ராஜநாகங்களும் தானாகவே சென்றுள்ளன. இதையடுத்து, தற்போது அந்த குழந்தையை கிராமத்தினர் தெய்வக்குழந்தை என்று வணங்கி வருகின்றனர்.

மேலும் இந்த காட்சியை அங்கிருந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது கைப்பேசியில் காணொளியாக எடுத்துள்ளார். தற்போது, அந்த காணொளி இணையத்தில் உலகமெங்கும் வேகமாக பரவி வருகிறது.