“தொவில்” ஆட்டம் பார்க்கச் சென்ற காதலனுடன் முரண்பட்ட காதலி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 18 வயதுடைய மாணவியொருவரே உயிரிழந்துள்ளார்.
இவர் தனது 20 வயதுடைய காதலனிடம் “தொவில்” ஆட்டம் பார்ப்பதற்கு செல்ல வேண்டாம் என கூறி முரண்பட்டுள்ளார்.
இந்நிலையில், காதலியின் வேண்டுகொளையும் மீறி காதலன் “தொவில்” ஆட்டம் பார்க்கச் சென்றதால், காதலி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.