வவுனியா தோணிக்கல் சிவாலய முன்பள்ளியின் விளையாட்டு விழா!!(படங்கள்)

301

வவுனியா தோணிக்கல் கிராம அபிவிருத்திச்சங்க சிவாலய முன்பள்ளியின் 21ம் ஆண்டு விளையாட்டு விழா நேற்று (20.07) பிற்பகல் 2.00 மணியளவில் முன்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

மழலைகளின் இன்னிசை வாத்தியத்துடன் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு, தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. பின்னர் தமிழ் மொழி வாழ்த்துடன் முன்பள்ளியின் கொடியை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உப தவிசாளர் திரு.நடராஜசிங்கம் (ரவி) அவர்கள் ஏற்றி வைத்ததுடன் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றிய செயலாளர் கௌரவ பிரபாகரக் குருக்கள் அவர்களின் ஆசி உரையுடன் விழா ஆரம்பமானது.

இந் நிகழ்வில் லண்டனை சேர்ந்த தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் நிதிப்பங்களிப்புடன் வவுனியா நகரசபை முன்னைநாள் உபதலைவர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் ஊடாக முன்பள்ளியின் ஆசிரியைக்கு மாதாந்த கொடுப்பனவையும் (இவ் வேதனம் தொடர்ந்து வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது) முன்பள்ளியின் பழைய மாணவர்களான மகேந்திரன் ரனோஜன் மற்றும் பரந்தாமன் நிரோஜன் அவர்களுக்கு கா.பொ.த. சாதாரண தரத்தில் அதிதிறமை சித்திகளை பெற்றமைக்காக வெற்றி கேடயங்களும் வழங்கபட்டது.

மேலும் முன்பள்ளி மாணவர்களின் விளையாட்டு ஆற்றல்களை அதிகரிக்கும் நோக்கில் விளையாட்டு சாதனங்களை (சருக்கேஸ்) வழங்குவதாக வவுனியா நகரசபை முன்னைநாள் உபதலைவர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக நெடுங்கேணி பிரதேச செயலாளர் திரு.பரந்தாமன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உபதவிசாளர் திரு.நடராஜசிங்கம் (ரவி), வவுனியா நகரசபை முன்னைநாள் உபதலைவர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்),
வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றிய செயலாளர் கௌரவ பிரபாகரக் குருக்கள் அவர்களும் கிராம சேவையாளர்,சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்கள்,காவற்துறை உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள்,நலன்விரும்பிகள், பழைய மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10