மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெரதுவ பகுதியில் உள்ள வீடொன்றில் இரத்தக் காயங்களுடன் நபரொருவரின் சடலம் நேற்று வியாழக்கிழமை (18) பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 54 வயதுடைய ஆண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் இந்த சம்வம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.