வெளிநாட்டு வாழ் தமிழ் பெண் திருகோணமலையில் மரணம்!!

648

ஐரோப்பிய நாடொன்றில் குடியுரிமை பெற்ற இளம் தாய் ஒருவர் திருகோணமலையில் உயிரை மாய்த்துள்ளார்.

இந்த சம்பவம் திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துவரங்காடு புதுக்குடியிருப்பு நேற்றையதினம் பதிவாகி உள்ளது.

நோர்வே நாட்டின் பிரஜாவுரிமையை கொண்ட ரீனாசிறில் என்ற 32 வயதுடைய 4 மாத குழந்தையின் தாயொருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.