தமிழகத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி வள்ளுவா் தெருவில் வசித்து வருபவர் பாண்டியராஜன். இவரது மகன் 11 வயது தென்றல். இதே பகுதியில் வசித்து வருபவர் 13 வயது சௌந்திரபாண்டி.
இருவரும் அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் முறையே 6 மற்றும் 8ம் வகுப்பு படித்து வந்தனா். மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து விட்டு விளையாட சென்றனர்.
வடுகபட்டியிலிருந்து மேலகாமக்காபட்டி ரோட்டில் கட்டையன் ஊருணியில் இருவரும் குளித்த போது நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினர். இதனிடையே மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவா்கள் வீடு திரும்பாததால் அவா்களது பெற்றோா் பல இடங்களில் தேடினா்.