நாடாளுமன்றத்திற்கு அருகில் கோர விபத்து : நால்வர் வைத்தியசாலையில்!!

678

நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு இளைஞர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தானது இன்று (03.08.2024) காலை இடம்பெற்றுள்ளது.

அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் காயமடைந்தவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்தில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.