மொனராகலை பிபிலமுல்ல பகுதியில் தனது 5 வயது மகளுடன் தாயொருவர் திங்கட்கிழமை (05) காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மனைவி – மகள் காணாமல்போனமை தொடர்பில் கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து சம்பவம் தொடர்பில் மெதகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரபாத் திஸாநாயக்க விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.