வவுனேஸ்வரத்து அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு இன்று இரண்டாம் நாள் திருவிழா!!(படங்கள், வீடியோ)

352

சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள் நிறைந்தஇலங்கா தீபத்தின் வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு இரண்டாம் நாள் திருவிழா ஆடிச் செவ்வாய் கிழமையுடன் சேர்த்து விசேடமாக நடைபெற்றது.

நேற்று காலை பத்து மணிக்கு மூலஸ்தான பூசை கொடிதம்ப பூசை. தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்று அம்பாள் ரிஷப வாகனத்தில் உள்வீதி வெளி வீதி எழுந்தருளி செய்தாள்.

மீண்டும் மாலை நான்கரை மணியளவில் ஆடி செவ்வாய் கிழமையை முன்னிட்டு துர்கை அம்மனுக்கு இராகுகால விசேட பூசையும் நடைபெற்று இரவு ஆறரை மணிக்கு வசந்த மண்டப பூஜை இடம்பெற்று அம்பாள் சிங்க வாகனத்தில் எழுந்தருளிய திருக்காட்சி இடம்பெற்றது.

திருவிழா தொடர்பான விபரங்களுக்கு தொடர்ந்தும் வவுனியா நெற்ருடன் இணைந்திருங்கள்.

-கஜேந்திரன்-

1 2 3 4 5 6 7 8 9 10