வவுனியா புதூர் பிரதேசத்தில் கன்டர் ரக வாகனம் ஒன்று குடைசாய்ந்ததில் இருவர் படுகாயம்!!

369

Acci

வவுனியா புதூர் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை (23.07) கன்டர் ரக வாகனம் ஒன்று குடைசாய்ந்ததில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி அரிசி மற்றும் தவிடு என்பவற்றை ஏற்றிச்சொன்ற வாகனமே, இவ்வாறு வேக கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்துள்ளது.

இவ்விபத்தின்போது இராணுவத்தினரால் கட்டப்பட்டிருந்த சிறிய அலங்கார வடிவமும் சிதைவடைந்து உள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.