காணாமல்போன யுவதி : உதவி கோரியுள்ள உறவினர்கள்!!

287

கம்பஹா மாவட்டத்தின் நிட்டம்புவ ஒர்சட்வத்த பிரதேசத்தை சேர்ந்த பாத்திமா ஆயிக்ஷா எனும் இளம் யுவதி காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி கடந்த 11 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமல்போன யுவதி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் உறவினர்களால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் யுவதி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0777 302 372, அல்லது 0755 489 489 எனும் இலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு காணாமல்போன யுவதியின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.