மனைவியை அடித்து கொலை செய்த கணவன்!!

533

ஹபரணை, பலுகஸ்வெவ பிரதேசத்தில் பெண்ணொருவர் நேற்று கணவனால் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான பெண் ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குடும்ப தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எப்பாவல, பலுகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 63 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.