அமெரிக்காவில் துப்பாக்கி முனையில் இளம்பெண் பலாத்காரம்!!

570

Rape

அமெரிக்காவில் துப்பாக்கி முனையில் இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 20ம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில் பிரான்க்ஸ் நகரில் உள்ள கல்லறைத் தோட்டத்தின் தெருவில் வந்த இளம்பெண்ணை மர்ம நபர் ஒருவர் மடக்கியுள்ளார்.

மருத்துவமனை ஊழியர் போன்று உடையணிந்து வந்த இந்நபர் துப்பாக்கி முனையில் அந்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துவிட்டு சாதாரணமாக நடந்து சென்றுள்ளான்.

இந்த கொடூரமான காட்சி அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.மேலும் அந்த காணொளியை வெளியிட்ட பொலிசார் ,குற்றவாளியைப் பற்றி யாரேனும் அறிந்ததால் உடனே தங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.