அவுஸ்திரேலியாவில் மனைவியை கொலை செய்த இலங்கையருக்கு எதிரான குற்றச்சாட்டு நீதிமன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையருக்கு எதிரான தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 8ம் திகதி அறிவிக்கப்படும் என்று மெல்பேர்ன் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதி இலங்கைப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
மனைவி கொலை
அவரது கணவரான இலங்கையரால் கத்தியால் குத்தி அவர் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
வழக்கில் தாம் கொலை செய்யவில்லை என்றும், தற்காப்புக்காகவே அவரை தாக்கியதாகவும் குறித்த இலங்கையர் வாதாடி வந்தார்.
எனினும் அவர் கொலை செய்தமையை உயர் நீதிமன்ற விசாரணை உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.