
வவுனியா கூமாங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிப்பூர வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 21ம் திகதி ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இவ் உற்சவமானது தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று வரும் 30.07 அன்று நிறைவடையவுள்ளது.
தினமும் காலை 9 மணிக்கு விசேட அபிசேக பூசையும் மாலை 7 மணிக்கு உற்சவமும் நடைபெறவுள்ளதுடன், தினமும் மதியம் 12 மணிக்கு மகேஸ்வர பூசையும்( அன்னதானம்) நடைபெறவுள்ளது. பக்த அடியார்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றார்கள்.
-பாஸ்கரன் கதீசன்-





