முல்லைத்தீவு பாடசாலை தண்ணீர் தொட்டிக்குள் காத்திருந்த அதிர்ச்சி : புலம்பும் பெற்றோர்கள்!!

682

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் கல்லூரி தண்ணீர் தொட்டியில் இருந்து அழுகிய நிலையில் மூன்று குரங்குகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திட்யுள்ளது.

நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்ட சிரமதானி பணியின் போதே குரங்குகளின் சடலம் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கல்லூரியில் நடைபெற்ற சிரமதான பணிகளில் பெற்றோர்கள் குழு ஒன்று வந்து தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது , குரங்குகளின் பிணங்கள் கிடைத்துள்ளன.

அதேவேளை குறித்த பாடசாலையில் சுமார் 400 மாணவர்கள் கல்வி கற்ரு வரும் நிலையில், அந்த தண்ணீர் தொட்டியில் இருந்து கடந்த 3 மாதங்களாக குடிநீர் பெற்று வந்துள்ளதாக க்கூறப்படுகின்றது.

தண்ணீர் தொட்டியின் மேல்பகுதி மூடாமல் இருந்தமையால் , 3 குரங்குகளும் தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்திருந்திருந்தகாக கூறப்படுகின்றது.

தொட்டியில் தண்ணீர் குடிக்க வந்த குரங்குகள் தொட்டிக்குள் விழுந்து இறந்துள்ளன. தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து, கிருமி நாசினி திரவத்தை தெளித்து, வீடுகளுக்கு சென்ற மாணவர்களின் பெற்றோர், தொட்டியின் மூடியை பொருத்தும் பணியை, பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.