இலங்கை மக்களுக்கு கணினி அவசர செயற்பாட்டு பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை!!

526

ஜனாதிபதித் தேர்தலின் போது சமூக ஊடகங்களில் பதிவுகளை பரிமாறிக்கொள்ளும் போது கவனமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதற்கமைய, இழிவுபடுத்தும் பதிவுகள் குறித்து மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

சில போலி கணக்குகளின் ஊடாக வெளியிடப்படும் பதிவுகளை, உங்கள் தமது சமூக ஊடக கணக்குகள் ஊடாக பகிர்வதன் மூலம் தேர்தல் சட்டத்தின் கீழ் குற்றவாளியாகும் அபாயம் உள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற அனைத்து முறைப்பாடுகளையும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.