
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 103வது நினைவுதினம் இன்று (11.09.2024) வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள அவரது சிலையடியில் நடைபெற்றது. இதன்போது அவரது திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அத்துடன் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தொடர்பான நினைவுப் பேருரைகளை து.டன்சிகா, பி.அனிஸ்ரன், ரொ.றக்ஸன் மற்றும் தமிழ்மணி அகளங்கன் ஆகியோர் ஆற்றினர்.

வவுனியா நகரசபை மற்றும் தமிழ் விருட்சத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் செட்டிகுளம் பிரதேச சபை தலைவர் ஜெகதீஸ்வரன், முன்னாள் நகரசபை உறுப்பினர் சேனாதிராஜா,

நகரசபை உத்தியோகத்தர், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்க தலைவர் ரவீந்திரன், பொது அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.






