யாழில் பரபரப்பு : வீடு எரிந்து பெண் பலி : நடந்தது என்ன?

1448

யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் இன்று அதிகாலை வீடு ஒன்று மர்மமான முறையில் எரிந்து ஒருவர் பலியாகியுள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையில் குறித்த வீடு கல்வீடு என்பதனால் எவ்வாறு தீப்பற்றியது என்பது தொடர்பில் குழப்பம் நிலவுகின்றனது.

யாழ்ப்பாணம் நீர்வேலியில் தனிமையில் வசித்து வந்த 65 வயதுடைய பெண்ணொருவரே சம்பவத்தில், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீடு தீப்பற்றி எரிந்துள்ளதாகவும், இதனால் தீயில் சிக்கி பெண் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் எரிந்த நிலையில் வீட்டுக்கு வௌியில் காணப்பட்டுள்ளதுடன் வீட்டின் வாசலிலே மிளகாய் தூள் காணப்பட்டதாகவும் தெரியவருகிறது.

சம்பவ இடத்தில் யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்பு படையினர், தடயவியல் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டுக்கு யாராவது தீ வைத்தார்களா, அல்லது எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீடு தீப்பற்றி எரிந்ததா? என்ற கோணத்தில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தீ பிடித்தமைக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.